கொழும்பு வெள்ளவத்தையில் சந்தேகத்துக்குரிய மரணம்
கொழும்பு- வெள்ளவத்தையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர், சந்தேகத்துக்குரிய நிலையில் மரணமானமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வேலவனாராம வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் மயக்க நிலையில் அவர் மீட்கப்பட்டு பின்னர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
சந்தேகத்துக்குரிய மரணம்
எனினும் அங்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று ஜூன் 7 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
உள்ளூர்வாசிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் பேரில் வெள்ளவத்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இறந்தவர் வெள்ளவத்தையில் உள்ள வேலவனாராம வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
You may Like this..

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
