இத்தாலி செல்ல முற்பட்ட பெண் விமான நிலையத்தில் கைது
போலியான ஆவணங்கள் மூலம் பெண்ணை இத்தாலிக்கு அழைத்து செல்ல முயன்ற நபர் ஒருவர் விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
கொழும்பில் இருந்து கட்டார் ஏர்வேஸின் QR 655 விமானத்தில் டோஹா வழியாக இத்தாலியின் Malpensa நகரத்திற்கு செல்வதற்காக இந்த ஜோடி வருகைத்தந்திருந்ததாக விமான மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் ஆவணங்களை சோதனையிட்டபோது, அந்தப் பெண்ணிடம் கடவுச்சீட்டு மற்றும் இத்தாலிய நிரந்தர குடியுரிமை விசா அட்டை உள்ளிட்ட வேறொருவரின் பயண ஆவணங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
நிரந்தர குடியுரிமை
விசாரணையின் போது, தன்னுடன் வந்த நபர் தன்னை இத்தாலிக்கு அழைத்துச் செல்லவிருந்ததாகவும், அதற்காக 3.6 மில்லியன் ரூபாவை குருநாகலில் உள்ள பயண முகவர் ஒருவரிடம் செலுத்தியதாகவும் பெண் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
