ஆண்களே அவதானம்! கொழும்பில் சிக்கிய 20 வயது இளைஞன்
கொழும்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி பணம் பெற்ற இளைஞன் ஒருவரை கணினி குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஆண்களுடன் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு ஏற்படுத்தி தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்ட இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, ஆண் ஒருவரை அச்சுறுத்தி 07 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக குறித்த இளைஞன் மீது கணினி குற்ற புலனாய்வு பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இளைஞன் கைது
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேக நபரை தெஹிவளை கவுன்சில் அவென்யூ பகுதியில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
