தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை
குருநாகல் மாவத்தகம, வெஉட பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர் பலத்த காயமடைந்து மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெஉட பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குழு மோதல்
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகே ஒரு முதியவரை தாக்க ஒரு குழு கூடியபோது, உயிரிழந்தவர் தனது மகனுடன் அதைத் தடுக்கச் சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, அந்தக் குழுவில் இருந்த பலர் தாக்குதல் நடத்தி காப்பாற்ற வந்தவரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேத அறை
உயிரிழந்தவரின் சடலம் மாவத்தகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
