பொலிஸாரின் திடீர் நடவடிக்கையில் பல ஆவணங்களுடன் சிக்கிய நபர்
அம்பாறையில் பல ஆவணங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பக்கியெல்ல கன்னியம்பா பகுதியில் 04 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு
சந்தேக நபரிடம் இருந்து வெவ்வேறு பெயர்களை கொண்ட 04 தேசிய அடையாள அட்டைகள், 02 வெளிநாட்டு கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 02 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கிராம சேவையாளர் சான்றிதழ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நபர் அடையாள அட்டைகள் மற்றும் வெவ்வேறு பெயர்களைக் கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுடன் பல இடங்களில் சேவைகளை பெற்றுள்ளமையும் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து பக்கியெல்ல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam