கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (31) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி- கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
சோதனை
குறித்த சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 05.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அபராதம்
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 45 இலட்சம் ரூபா பெறுமதியான 30,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 150 சிகரட்டு காட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக, சுங்க அதிகாரிகளால் ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
