கிளிநொச்சியில் மீள்குடியேறிய மக்களின் தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
கிளிநாச்சி - பச்சிலைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களினுடைய மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியேறிய மக்களினுடைய தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், நேற்று (30.01.2025) பகல் 10 மணிக்கு மாவட்ட அரச அதிபர் தலைமையில் முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பதிவுகள் மேற்கொள்ளல்
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை, கிளாலி, இத்தாவில் மற்றும் ஏம்பெடுகேணி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் கடந்த 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக முழுமையாக இடம்பெயர்ந்து இன்றுவரை மீள் குடியமர முடியாத நிலையில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் இதுவரை 30 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறவும் 60 வரையான குடும்பங்கள் தங்களுடைய காணிகளை பராமரிப்பதற்கும் பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முகமாலை பிரதேசத்தில் கன்னிவெடி அகற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் பிரதேச செயலாளர் மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் இடம்பெயர்ந்த மக்கள எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
