விதிமுறைகளை மீறி யாழில் இருந்து கொழும்புக்கு ஆடுகளை ஏற்றிச்சென்ற நபர் கைது (Photos)
வவுனியாவில் விதிமுறைகளை மீறி 54 ஆடுகளை கூலர் ரக வாகனத்தில் ஏற்றிச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் இன்று (11.05.2023) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கல்கிசைக்கு விதிமுறைகளை மீறி ஆடுகள் ஏற்றிச்செல்வதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பதில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலமையிலான குழுவினர் தாண்டிக்குளம் பகுதியில் குறித்த வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்தினர்.
மேலதிக விசாரணை
இதன்போது விதிமுறைகளை மீறி 54 ஆடுகள் குறித்த கூலர் ரக வாகனத்தில் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.
பின்னர் குறித்த வாகனத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு
கொண்டு சென்றதுடன், வாகனத்தின் சாரதியான 42 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
