பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய முன்னாள் அமைச்சர்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய பணிப்புரை
பேலியகொட மெனிங் சந்தை பகுதியில் கடைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து வர்த்தகர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முன்னாள் அமைச்சர் வர்த்தகரொருவருக்கு 10 கடைகளை தருவதாக கூறி அவரிடமிருந்தே பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் வர்த்தகர்களுக்கு கடைகளை வழங்கத் தவறியதன் காரணமாக, அவர்கள் தற்போதைய பொறுப்பான இராஜாங்க அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்து, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan
