இஸ்ரேலியர்கள் தொடர்பில் மாலைத்தீவு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
மாலைத்தீவு அரசாங்கம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடைசெய்யும் வகையில் நாட்டின் சட்டங்களை மாற்றுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அலி இஹுசன் (Ali Ihusaan) இந்த முடிவை அறிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரழிவுத் தாக்குதல்கள்
இந்நிலையில் இஸ்ரேல் கடவுச்சீட்டில் மாலைத்தீவிற்குள் நுழைவதைத் தடைசெய்ய தேவையான சட்டத் திருத்தங்களை விரைவில் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மாலைத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11,000 இஸ்ரேலியர்கள் மாலைத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர். இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 0.6% ஆகும்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலைத்தீவுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவில் முஸ்லிம் மக்கள் தொகையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri