விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பொலிஸார்
கொழும்பில் வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கை வந்துள்ளனர்.
வெள்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒரு சடலம் காணாமல் போன மாலைதீவைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மாலைதீவு பொலிஸாரும் இது குறித்த விசாரணைகளில் தீவிரம் காட்டுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அடங்கிய மாலைதீவு குழுவொன்று இலங்கை புறப்பட்டுள்ளது.
இரண்டு உடல்களும் வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று அவ்ஹாம் நசீர் உடையது என உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள் விசாரணைகள் குறித்து தங்களிற்கு எந்த விபரமும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்களில் காயங்கள் காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் மாலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாலைதீவு பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பான அமைப்புகளுடன் தொடர்புகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்(Photo)
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam