இலங்கையர் ஒருவர் உட்பட 88 வெளிநாட்டவர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் ஜூலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஈப்போ நகர மையத்திலும் அதைச் சுற்றியும் சட்டவிரோத விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படும், இலங்கையர் ஒருவர் உட்பட 88 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அவர்கள், குடிவரவு மற்றும் குடிவரவு விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் குடிவரவுத் துறை இயக்குநர் மேர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் கூறியுள்ளார்.
கைது நடவடிக்கை
இதன்போது, 21 முதல் 46 வயதுக்குட்பட்ட 78 பெண்கள் மற்றும் 10 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தாய்லாந்தின் 64 பேரும், வியட்நாமின் 13 பேரும், நேபாளத்தின் 4 பேரும் இந்தியாவின் 3 பேரும் பங்களாதேஷின் 3 பேரும் இலங்கை ஒருவரும் அடங்குகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
