நிர்வாக முடக்கத்தை நிராகரித்த அம்பாறை மக்கள்: வழமைபோன்று செயற்பட்டனர் (Photos)
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆகியவை நிர்வாக முடக்கத்திற்கு அழைப்பு விடுத்த கோரிக்கையினை அம்பாறை மாவட்ட மக்கள் நிராகரித்து வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பெரிய நீலாவணை, சவளக்கடை, சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, நிந்தவூர், மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் (25.04.2023) உணவகங்கள் புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் வங்கிகள் சந்தைகள் போன்றவை வழமை போன்று இயங்கியுள்ளன.
மேலும் இம்மாவட்டத்தில் அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்களைக் கொள்வனவு செயவதில் ஈடுபட்டு வந்ததை அவதானிக்க முடிந்ததாகக் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு கடமை
அத்துடன், கல்முனை பொது சந்தை உட்பட அதனைச் சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றுள்ளது.
எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தாபிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிஸார் மற்றும் கடற்படை இராணுவமும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்ற பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுள்ளனர்.
மண்ணைக்காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி நிர்வாக முடக்கத்தை அனுஷ்டிப்போம் எனத் தமிழ்த் தேசிய கட்சி பிரதிநிதிகள் சிவில் செயல்பாட்டாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
