சஜித்துடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி
முன்னாள் இராணுவ தளபதியும் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (23.2.2024) சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் எதிர்ப்பு கொள்கை
இவர் ஐக்கிய மக்கள் சக்தியில் ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசகராகவும் செயற்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |