முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் - ரணிலுக்கு மைத்திரி சவால்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்
பெரும்பான்மை பலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் வெற்றிடமான பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலமைப்பை மீறியதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் முடிவை சவாலுக்கு உட்படுத்தலாம்
"எனது பார்வையில், விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார்," என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அரசியல் பேச்சு நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதமானது என்பதுடன், ஜனாதிபதி எடுத்த அனைத்து முடிவுகளும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதை நிர்வாகத்தை பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் நடக்கும் வரையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சர்வகட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
ரணிலுக்கு மைத்திரி சவால்
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் முடிவை நிரூபிக்க, தனக்கு பெரும்பான்மை இருப்பதைக் காட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.
தாம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்திய பல வெளிநாட்டுத் தூதுவர்கள், முறையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே இலங்கைக்கு உதவி வழங்க முடியும் என தெரிவித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
அவர்கள் இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது ஒன்றிணைந்த ஆட்சிகளையோ கையாள விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படும் வரை அரசியல் நிலைமைகளை தொடர்ந்து அவதானிப்பதாக தூதுவர்கள் தன்னு அறிவித்துள்ளனர்.
அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆகையினால் இந்த குழப்பத்தில் இருந்து விடுபட ஒரே வழி பொதுத் தேர்தலை நடத்துவதுதான் என்று மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan
