ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாக மைத்திரிக்கு உத்தரவு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் தனக்கு தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு (Maithripala Sirisena) ஜனாதிபதி விசாரணைக்குழுவில் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளையதினம் ஜனாதிபதி விசாரணைக் குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்துமூல அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணைக்குழு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே (India) செயற்பட்டதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மாளிகாகந்த நீதிமன்றத்தினால் எதிர்வரும் 4ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையிலேயே, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஆதாரங்களை கையளிக்குமாறு விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri
