ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு தொடர்பாக மைத்திரிபால வெளியிட்ட கருத்து
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தற்போது கூறுகின்ற சில கூற்றுக்கள் பொய்யானவை என்று கூறி அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான பிரச்சினை நீதிமன்றில் ஆராயப்பட்டு வருவதாகவும், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சஜித்துக்கு ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் அடிப்படையில், கட்சித் தலைவருக்கு முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என்றும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவை வழங்கவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியான கூற்றுக்களை அடுத்தே, குறித்த அறிக்கையை மைத்திரிபால வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan