சு.கவின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி தீர்மானிக்கவே முடியாது : தயாசிறி கடும் சீற்றம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாஸ களமிறங்குவார் என அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே தயாசிறி ஜயசேகர எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கட்சிக்குள் பிளவு
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |