சஜித் பிரேமதாச வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: மகிந்தானந்த அளுத்கமகே
தான் பதவி விலகுவதாக வழங்கிய வாக்குறுதியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய கலாசார நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் பதவி விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.12.2023) அமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பதவி விலகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் அதைச் செய்வாரா என்பதை தாம் அறிய விரும்புவதாக அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, மத்திய கலாசார நிதி, அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
