என் உயிர் ராஜபக்சர்களுக்கே! ஆதரிக்கும் மொட்டு எம்.பி - செய்திகளின் தொகுப்பு
எனக்கு பலர் அரசியல் ரீதியாக சேறு பூசும் வேலைகளை செய்யலாம், என்னை கொலையும் செய்யலாம். உடலை இரண்டாக துண்டித்தாலும் என் உயிர் ராஜபக்சர்களுக்கே என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச போன்று இந்த நாட்டுக்கு இதுவரை எவரும் சேவை செய்யவில்லை. இனியும் செய்யப் போவதுமில்லை. அரசியலமைப்புக்கு அமைய முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதுடன் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பிற்போடப்பட்ட குறித்த தேர்தல் எப்போது இடம்பெறும் என்பது தெரியாது.
இந்த தேர்தல் இடம்பெறவில்லை எனில் நிச்சயம் அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |