மகிந்தவின் பதவி விலகல் அறிவிப்பு! கொழும்பின் பல பகுதிகளில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள்
கொழும்பின் பல பகுதிகளில் மக்களால் பட்டாசுகள் வெடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை முதல் கொழும்பில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அரசாங்கத்திற்கு அதிலும் குறிப்பாக மகிந்தவிற்கு ஆதரவாக அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தாக்கியிருந்தனர்.
இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்துள்ளனர்.
| பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மகிந்த! சற்று முன்னர் வெளியானது தகவல்(Photo) |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri