ரணிலின் முடிவிற்காக காத்திருக்கும் மகிந்த ராஜபக்ச
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததன் பின்னர் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி முன்னிறுத்தப் போவதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கும் என தகவல்கள் வெளியானது.
ஜனாதிபதி வேட்பாளர்
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவிடம் வினவிய போது அது வதந்தி என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |