யுத்த வெற்றி கொண்டாட்டத்திற்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பில்லை!வெளியான தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நாளையதினம் (19) நடைபெறவுள்ள தேசிய வெற்றி தினக் கொண்டாட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இதுவரை எந்த அழைப்பிதழும் வரவில்லை என அவரது ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நாளை (19) "தேசிய வெற்றிக் கொண்டாட்டம்" நடைபெற உள்ளது.
இந்தநிலையில், 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் உபாலி பன்னிலகே கூறியது பொய்யானது என்றும் மனோஜ் கமகே கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
பொய்யான தகவல்
வெற்றி தினக் கொண்டாட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறி அமைச்சர் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வெற்றி தினக் கொண்டாட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் ஜனாதிபதி செயலகம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து தனக்குக் கிடைக்கும் என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam