முக்கிய வழக்குகளில் தலையிடும் மகிந்த, பசில், ரணில்...
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் இதுவரை 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் தலையீட்டின் காரணமாக சில கணிசமான வழக்குகள் மீள பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
தொலைபேசி அழைப்பு
இன்றைய நிலவரப்படி, எந்த அமைச்சரும் எந்த நீதிபதிக்கும் தொலைபேசி அழைப்பு விடுப்பதில்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இதன் பொருள் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் இதுவரை 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்போது சட்டவிரோத செயற்பாடடடுடைய பல வழக்குகள் எங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மகிந்த, பசில், ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டின் காரணமாக, சமீபத்திய காலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.
அவை நீதிமன்றத்திற்கான கேள்விகள் அல்ல. அவை வழக்குத் தொடுக்கும் நிறுவனங்கள், மற்றும் நபர்களின் நடவடிக்கையால்” என மனோஜ் நாணயக்கார கூறியுள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri