கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக திரண்டுள்ள தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் (Video)
மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்திரளானோரின் பங்குபற்றுதலுடன் குறித்த போராட்டமானது இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டக்காரர்கள் “நிறுத்து நிறுத்து மகாவலி என்ற போர்வையில் தமிழரின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்து” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதைகளை ஏந்திய வண்ணம் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழர்களின் பூர்வீக நிலங்களும் வாழ்வாதார நிலங்களும் சிங்கள குடியேற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது என இதன்போது போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.




இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
