வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை - இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (04.01.2026) விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
வெனிசுலா மீதான நடவடிக்கை
இதன்போது அமெரிக்கா வெனிசுலா மீது முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.

அத்துடன், ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் படி செயல்படுவது கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ - அவரது மனைவியை கைப்பற்றியது குறித்து மக்கள் விடுதலை முன்னணி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதன்படி வெனிசுலாவின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசை ஆக்கிரமித்து அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திய இந்தச் செயலை தாம் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |