எதுவெல்லாம் இருக்கிறது பார்! கீழடியில் புதைந்திருக்கும் தமிழர்களின் வரலாறு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(05.03.2023) திறந்து வைத்துள்ளார்.
கீழடியில் தமிழ்நாடு அரசு சார்பில், 2 ஏக்கர் நிலத்தில் 18. 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கள அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கீழடி அருங்காட்சியகத்தில் பல்வேறு காட்சிக் கூடங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எதுவெல்லாம் இருக்கிறது பார்
இது தொடர்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடேசன்,“அன்று எதிர்கட்சித்தலைவராக கீழடியை பார்வையிட வந்தார். இன்று முதலமைச்சராக கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைக்க வருகிறார்.
எதுவும் இல்லையெனச்சொல்லி வெளியேறியது ஒன்றிய அரசியல். “எதுவெல்லாம் இருக்கிறது பார்…” என உலகிற்கே காட்சிப்படுத்துவது தமிழ்நாட்டு அரசியல்.”என கூறியுள்ளார்.
தனது முகநூல் பதிவினூடாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.