இலங்கையில் 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தொடர்பான 20 விபத்துக்கள்
இலங்கையில் 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தொடர்பான 20 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே குறித்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கிண்ணியா, கொட்டாவ, நீர்கொழும்பு, வவுனியா, புத்தளம், நுவரெலியா, கொட்டகலை, வாத்துவ, மஹாபுத்கம, அம்பலங்கொட, கோனபினுவல, மித்தெனிய மற்றும் விலச்சிய ஆகிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் ஆகியன வெடித்த சந்தர்ப்பங்களே இவ்வாறு இடம்பெற்றுள்ளன.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |