எரிபொருள் விற்பனையால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நிதி இழப்பு! பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தகவல்
இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் மூலமும் அரசு பாரிய நிதி இழப்பைச் சந்தித்து வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் மானியங்கள்
எரிபொருட்களின் உண்மையான சந்தை விலைக்கும் தற்போதைய விற்பனை விலைக்கும் இடையிலான பாரிய இடைவெளி குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய உலக சந்தை நிலவரங்களுக்கு அமைய, அரசு வழங்கி வரும் மானியங்கள் காரணமாக பின்வரும் நட்டங்கள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு லீற்றர் டீசல் - 204 ரூபா நட்டம்
ஒரு லீற்றர் பெட்ரோல் - 32 ரூபா நட்டம்
மின்சார உற்பத்தி சவால்
நாட்டின் தற்போதைய மின் தேவை மற்றும் உற்பத்தி நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, வரும் காலங்களில் மின்சார உற்பத்திக்காக டீசலைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம் எனவும், இது மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடும் கியூ.ஆர். முறைமையும்
அதிகரித்து வரும் நட்டத்தைக் குறைக்கும் வகையிலும், தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையிலும் தற்போது எரிபொருள் ஒதுக்கீடு முறைமை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கியூ.ஆர். முறைமையூடாக நீண்ட வரிசைகள் இன்றி மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளைச் சீராக முன்னெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
தற்போது நிலவும் நிதிச் சுமை மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து பொலிஸார் மற்றும் துறைசார் அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமே இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam