இலங்கையில் கடவுச்சீட்டு பெற நீண்ட வரிசை - காரணத்தை வெளிப்படுத்தியுள்ள தேரர்

Protest School Passport Teachers Ulapane Sumangala thero
By Mayuri Oct 23, 2021 04:16 AM GMT
Report

திங்களன்று அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்களாயின் இனி எந்தவொரு ஆட்சியாளர்களிடம் இருந்தும் இதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றிணைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் (Ulapane Sumangala thero) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டம் பாரிய வெற்றியடைந்துள்ளது. அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையின் காரணமாக போராட்டங்களை தோல்வியடைய செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளது.


102 நாட்களுக்கும் அதிகமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர், ஆசிரியர்களை மீண்டும் வீதிக்கு இறக்குவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது? அரசாங்கத்தின் இதுபோன்ற செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் அதிபர், ஆசிரியர்களை உதாசீனப்படுத்துவதாகும்.

இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை காட்டிக் கொடுத்து திங்களன்று அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்தால் மீண்டுமொரு முறை எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.

பாடசாலைக்கு சமூகமளிக்காத அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தல் அல்லது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் என்பன சட்ட ரீதியானதல்ல. அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்திகு எவ்வித அதிகாரமும் கிடையாது.

எனவே எவ்வித தடையும் இன்றி எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அவற்றுக்கு முன்னிலையில் நின்று தலைமை வகிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

தமது தோல்வியை மறைப்பதற்காக வியாழனன்று சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்ததாகவும், ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததாகவும் கல்வி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் கூறுகின்றனர்.

ஆனால் எந்தவொரு பாடசாலையிலும் நுழைவாயில் கூட திறக்கப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை நிலவரமாகும். கல்வி அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமே எமது போராட்டத்தை தவறாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

கற்ற அறிவுடைய அமைச்சர்களுக்கு எமது கோரிக்கைகள் நியாயமானவை என்பது தெரியும். எனவே 25ஆம் திகதி நாம் பாடசாலைக்கு சமூகமளிக்கப் போவதில்லை.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மாத்திரமே அன்றைய தினம் பாடசாலைகளுக்குச் செல்லும். இந்த போராட்டத்தின் ஒரு பாகமே குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்திற்கு முன்னாள் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக காணப்படும் நீண்ட வரிசை ஆகும்.

உலகம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களின் கல்வி உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளதால் இலங்கை பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இந்த வரிசைக்கும் காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US