உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களின் பெயர்கள்: வெளியானது அரச வர்த்தமானி
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவற்றின் அடிப்படையில் நகர முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் அவர்களின் இடமாற்றுப் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(1) வெளியிடப்பட்டுள்ளது.
22 மாவட்டங்களுக்கும் இந்த அறிவித்தல் நடைமுறையாகும் வகையில், பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் வழியாக, உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் புதிய பொறுப்பாளர்கள் தங்களது பணிகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் கீழே..
