உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட அறிவிப்பு
2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி குறித்த வேட்பாளர்கள் மே 28ஆம் திகதி அல்லது அதற்கு முன் தங்கள் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் கூறுகையில், 2023ஆம் ஆண்டு தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் எண்.
நிதி வெளிப்படுத்தல்
03இன் விதிகளின் படி வேட்பாளர்கள் தங்கள் நிதி வெளிப்படுத்தல்களை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கைகள் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த செயல்முறை இருக்கிறது என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri