தமிழரசு கட்சிக்கு ஏனைய கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தம்! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka Election
By Erimalai May 25, 2025 06:37 AM GMT
Report

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவே ஆணை வழங்கியிருந்தனர், அந்த ஆணைக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி செயற்படுமாகவிருந்தால் அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் முதன்மை நிலையை பெற்றுள்ளன. கிளிநொச்சி மாவட்ட சபைகளைத் தவிர அதிக ஆசனங்களை தமிழரசு கட்சி பெற்ற போதும் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளோடு சேர்ந்துதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! அடுத்த வாரம் நாமல் கைது..

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! அடுத்த வாரம் நாமல் கைது..

தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு இரண்டு நிலைப்பாடுதான் இருந்தது. ஒன்று நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற முதன்மை நிலையை இல்லாமல் செய்வது, இரண்டாவது தமிழ்த் தேசிய கட்சிகளை ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைந்த அரசியலுக்குள் தள்ளுவது.

தமிழரசு கட்சிக்கு ஏனைய கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தம்! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் | Local Government Election Sri Lanka

தேர்தல் முடிவுகளும் கிட்டத்தட்ட அதே அளவில்தான் வந்திருக்கின்றன. தேர்தலில் கிடைத்த வெற்றி என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றியே ஒழிய தமிழ் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி அல்ல.

பிடிவாத நிலை

ஆகவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். ஆனால் கட்சிகள் தாம் பெரும்பான்மை பெற்ற இடங்களில் தாங்கள் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கின்ற பிடிவாத நிலையில் இருக்கின்றன.

அதேவேளை ஏனைய கட்சிகள் அதிக ஆசனங்களை பெற்ற சபைகளிலும் கூட அவர்களை மீறி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் பல சபைகளில் முதன்மை நிலை பெற்றிருக்கின்ற போதும் கிளிநொச்சியை தவிர அவர்களுக்கு தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை இல்லை.

மட்டக்களப்பில் மதிய உணவு சாப்பிட சென்ற சட்டத்தரணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மட்டக்களப்பில் மதிய உணவு சாப்பிட சென்ற சட்டத்தரணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்த இடங்களில் தமிழ் தேசிய பேரவையோடும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேசியிருக்கின்றனர். தமிழ் தேசிய பேரவை இந்த விடயத்தில் நிதானமாக மக்கள் தந்த ஆணைப்படி ஒரு கொள்கை கூட்டை அமைப்பதற்கு வாருங்கள் என அறைகூவல் விடுத்துள்ளது.

ஆனால் இந்த அழைப்பை இலங்கை தமிழரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிராகரித்துள்ளது. அதற்குரிய காலம் தற்போது கனியவில்லை என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான கூட்டு இல்லாத நிலை

இந்நிலையில் கொள்கை ரீதியான கூட்டு இல்லாத நிலையே காணப்படுகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கும் தமிழரசு கட்சிக்கும இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் பெரும்பான்மையாக உள்ள சபைகளில் 4இல் தாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.

தமிழரசு கட்சிக்கு ஏனைய கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தம்! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் | Local Government Election Sri Lanka

அதில் ஒன்று வவுனியா மாநகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, மானிப்பாய் பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை. வவுனியா நகரசபையில் சங்கு கூட்டணிதான் அதிக ஆசனங்களை பெற்றுள்ளன.

அங்கு அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் பெரிய பிரச்சினை இல்லை. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தாம் அதிகமான ஆசனங்களை பெற்றுள்ளமையால் அதனை தாம் விட்டுக்கொடுக்க முடியாது என்று இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மறுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: பும்ராவின் அதிர்ச்சி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: பும்ராவின் அதிர்ச்சி அறிவிப்பு

மானிப்பாய் பிரதேச சபையிலும், மாந்தை கிழக்கு பிரதேச சபையிலும் அவர்கள் ஏந்தவித தீர்மானத்திற்கும் வரவில்லை. தமிழரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்ற சபைகளில் தமிழரசு கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும் என்று தமிழரசு கட்சியின் தீர்மானம் உள்ளதாக தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

உண்மையில் ஒரு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவர்கள் தீர்மானம் எடுத்துரைக்க கூடாது. அதனையும் மீறி அவர்கள் ஒரு தீர்மானத்தை அடித்திருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு ஒரு நெருக்கடியையும் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US