தேர்தல் ஒத்தி வைப்பு தொடர்பில் விவாதம் வழங்க முடியாது
தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் விவாதம் ஒன்றை வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த செயற்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
ஆளும் கட்சியின் அறிவிப்பு
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் கட்சி அறிவித்துள்ளது.
தேர்தல் ஒத்தி வைப்பு குறித்து நாடாளுமன்ற விவாதமொன்றை நடாத்துவது குறித்து இன்றைய தினம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேர்தல் ஒத்திவைப்பு குறித்து ஒருநாள் விவாதம் நடாத்துவதற்கு அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல, சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு அமையவே இன்றைய தினம் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
