இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை
இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இரண்டு எழுத்தாணை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியவர்களினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
அத்துடன், மற்றைய மனு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போதைய உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் அடுத்த வருடம் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட விதிகளின்படி தேர்தல் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே இதற்கான செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்படுவதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
எனவே, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும், உள்ளுராட்சி தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்து அரசாணை பிறப்பிக்கவும், தேர்தலை நடத்த உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
