சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு செவி சாயுங்கள்! - ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை
சுகாதார அமைசசரின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமாறு ஜே.வி.பி கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்போரின் எண்ணிக்கையை கருத்திற் கொள்ளும் போது தற்போதைய கோவிட் தடுப்பு செயலணியின் நடவடிக்கைகள் குறித்து எந்த வகையிலும் திருப்தி கொள்ள முடியாது.
துரதிஸ்டவசமாக கோவிட் தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் கடமையாற்றிய நிபுணர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டனர். கோவிட் நான்காம் அலை தாக்கும் போது ஜனாதிபதிக்கு எஞ்சியிருப்பது இராணுவத் தளபதியும், புலனாய்வுப் பிரிவு பிரதானியும் மட்டுமேயாகும்.
இந்த நாட்டின் நிபுணத்துவ மருத்துவர்கள் கூறுவதனை உங்களால் கேட்க முடியாவிட்டால் தயவு செய்து சுகாதார அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சரின் கோரிக்கைகளுக்கேனும் செவி சாய்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
