பல்பொருள் அங்காடிகளில் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய முடியாது
பல்பொருள் அங்காடிகளில் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இணைய வழியாக ஆர்டர் செய்து மதுபான போத்தல்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இதுவரையில் அவ்வாறான எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என மதுவரித் திணைக்கள பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்று நிலைமைகளினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையின் காரணமாக மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் முறையில் மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும் என உள்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.