வலி வடக்கு உயர் பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Election
By Kajinthan Apr 17, 2025 07:39 AM GMT
Report

வலி வடக்கு உயர் பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக வலி வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும்,

1990ஆம் ஆண்டு முதல் 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலிவடக்கில் கீரிமலை, காங்கேசந்துறை தையிட்டி ஊரணி, மயிலிட்டி, பலாலி, வயாவிளான், கட்டுவன், குரும்பசெட்டி, தோளக்கட்டி ஆகிய கிராமங்களில் மக்களின் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறப்பட்டதற்கு அமைய உடனடியாக காணிகளை விடுவிக்குமாறு வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் கோரிக்கை விடுக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை

யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலம் முடிவடைந்தும் ஐந்தாவது ஜனாதிபதி மாற்றமாகியும் நாலாவது நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பல வாக்குறுதிகள் வழங்கியும் இதுவரை சுமார் 2900 ஏக்கர் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

கடந்த 10.04.2025 அன்று பலாலி வீதியின் ஒரு பகுதி நிபந்தனைகளுடன் பகல் நேரத்தில் மட்டும் திறந்து வைக்கப்பட்டதை வரவேற்கும் அதேநேரம் 2018ம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குழுவின் அனுமதி பெறப்பட்ட காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி போன்ற கிராமங்களில் விடுவிக்கப்படவிருந்த சுமார் 500 ஏக்கர் காணிகளில் 50 ஏக்கர் காணிகள் மட்டுமே இதுவரை மக்களின் தேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த காணிகளை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் இராணுவ கெடுபிடிகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன. தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரும் சமமாகவும் சமத்துவமாகவும் நடாத்தப்படும் புதியதோர் இலங்கையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

வலி வடக்கு உயர் பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் | Letter To The President Regarding Land Release

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 5 மாதம் கழிந்தும் புதிதாக காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களின் துன்பத்தினை தமது அரசியலுக்கு தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தாது என்று கூறியிருந்தாலும் இனவாதமற்ற அரசியலை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் சிங்கள மக்கள் கூட ஆதரிக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்? எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் 6/5/2025 அன்று நடப்பதற்கு முன் வடக்கு மக்களின் வாக்குகளை பெற்ற நீங்களும், உங்களது அரசும் உயர்பாதுகாப்பு வலையத்தில் இருக்கும்.

மக்களுக்கு காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் அதேநேரம் பின்வரும் கோரிக்கைகளை உங்களுக்கும். உங்கள் அரசுக்கும் முன்வைக்கிறோம்.

1. வலி வடக்கில் முப்படையினரதும் உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

2. 1983 ஆம் ஆண்டு முதல் விமான நிலைய விஸ்தரிப்புக்கென கையகப்படுத்தப்பட்டும் இதுவரை எந்த வித பயன்பாடோ அபிவிருத்தியோ செய்யப்படாத காணிகள் உடனடியாக உரிமையாளரிடம் கையளிக்க வேண்டும்.

ஜனாதிபதி தொடர்பில் மொட்டு கட்சி முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி தொடர்பில் மொட்டு கட்சி முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

3. ஜனாதிபதி மாளிகை மற்றும் தையிட்டி விகாரை போன்ற காணிகள் தொடர்பாக விசேட அவதானம் எடுத்து நீதியான முறையில் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக காணிகள் மீளளிப்பதற்கான வெளிப்படையான தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.

4. தற்போது அரசின் அமைப்புகளால் கையகப்படுத்தப்பட்டு அல்லது பயன்படுத்தப்படும் அனைத்துகாணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய முழுமையான வெளிப்படையான அறிக்கை ஒன்றை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும்.

வலி வடக்கு உயர் பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் | Letter To The President Regarding Land Release

5. விடுவிக்கப்பட்ட காணிகளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதும் பராமரிப்பதில் உள்ள சவால்களை நீதியானதும் மனிதாபிமான முறையில் கையாண்டு காணிகளை பாதுகாப்பதற்கும் எல்லைகளை நிர்ணயிப்பதற்கும் குறைந்ததது வேலி போட்டு மின்சார இணைப்புக்களை பெற அரச நிதி ஒதுக்கீடு செய்து 2025 தொடக்கம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

6. இந்த பகுதிகளில் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தஉண்மையே. ஆகையால் நிதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாக்குறுதி அழித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசு காணிகளை விடுவிப்பதுடன் குறைந்தது வீடுகளை மீளக் கட்ட அல்லது புனரமைக்க திட்டமிடல் செய்து வருடாந்தம் இதற்கான நிதியினை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.

7. இந்திய மீன்பிடிப்படகுகள் காரணமாக எமது மீன்பிடியினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அனைவரும் அறிவார்கள். அதேநேரம் 1981ம் ஆண்டு வடக்கு மக்களுக்காக கட்டப்பட்டு 2017 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் மயிலிட்டி உற்பட வடபகுதி மீனவர்களின் தேவைக்கு பயன்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இலங்கைக்கு தாங்கிக் கொள்ள முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப்

இலங்கைக்கு தாங்கிக் கொள்ள முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப்

8. கையகப்படுத்தப்பட்ட இந்திய இழுவைப்படகுகள் மற்றும் தென்பகுதியிலிருந்து வரும் பெரிய மீன்பிடி படகுகள் குறைக்கப்பட்டு உள்ளுர் மீனவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

9. மயிலிட்டி துறைமுகம் மயிலிட்டி மீனவர் சங்கத்தின் பராமரிப்பிற்கு வழங்கப்படவேண்டும். மீன்பிடி துறைமுகங்கள் நாடெங்கும் மீனவர் சங்கங்களின் முகாமையிலேயே உள்ளன. இருந்தபோதும் மயிலிட்டி துறைமுகம் இலங்கை துறைமுக கூட்டுத்தாபனத்தின் பொறுப்பிலும் கடற்படையின் கட்டுப்பட்டிலேயே இதுவரை உள்ளது. மயிலிட்டி துறைமுகத்தின் நிர்வாகம் உடனடியாக மீனவர் அமைப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.

10. காங்கேசன்துறை கீரிமலை வீதி மற்றும் கட்டுவன் வசாவிளான் வீதி உற்பட மூடப்பட்டுள்ள அனைத்து வீதிகளும் உடன் திறப்பதுடன் அந்த வீதிகள் ஊடாக பொதுமக்கள் பிரயாணம் செய்வதற்கான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

11. நல்லிணக்க அடிப்படையில் தமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அழித்து சேதமாக்கப்பட்ட அனைத்து மத ஆலயங்கள் மற்றும் கோவில்களை விடுவித்து அரச செலவில் மீள் புனரமைப்பு செய்வதை அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாமல் தேசிய மக்கள் சக்தியின் மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போது உள்ளுராட்சி மன்றங்களில் தமது தமிழ் மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு நீதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் என்று நம்பி களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் அனைவரிடத்திலும் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இந்த கோரிக்கைகளில் தேர்தலின் முன் இலகுவாக நிறைவேற்றக் கூடிய விடயமான மக்களின் அனைத்து காணிகளையும் உடன் விடுவிக்கக் கோரி அவர்களும் தமது கட்சியுடனும் அரசிடமும் அமைச்சர்களிடமும் ஜனாதிபதி அவர்களிடமும் பகிரங்க கோரிக்கை விடுக்கும்படியும்.

அத்துடன் இவ்விடயத்தில் தீர்வினை நடைமுறைப்படுத்தவதற்கு உரிமையாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி வெளிப்படையான பேச்சுவார்த்தை கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US