முள்ளிவாய்க்கால் உறவுகளை இழந்தவர்களுக்கே வலி தெரியும்! லியோ ஆம்ஸ்ட்ரோங் அடிகளார்
முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்டிருந்த பொது நினைவு தூபி அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இழந்தவர்களின் வலி அதனை கொடுத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு அதன் வலி தெரிந்திருக்கப் போவதில்லையென லியோ ஆம்ஸ்ட்ரோங் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும்,முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டிருந்ததுடன்,நினைவு தூபியும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதற்கும் இராணுவத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா முன்னதாக தெரிவித்திருந்தார்.இழந்தவர்களின் வலி அதனை கொடுத்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,