உள்ளூராட்சி மன்ற தேர்தல் மனுக்களை இரத்துச்செய்யும் சட்டத்திருத்தப்பணிகள் ஆரம்பம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு(Ministry of Local Government) தெரிவித்துள்ளது.
அமைச்சர் சந்தன அபேரத்னவின்(Chandana Abayarathna) தகவல்படி, சட்ட வரைவு நிபுணர் திணைக்களத்தினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை அமைச்சர்கள் இணக்கப்பாட்டுக்கு அமைய இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எட்டப்பட்டது.
இதன்படி, மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான திருத்தங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த சில வாரங்களில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 21 நிமிடங்கள் முன்

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
