தமிழ் இளைய சமூகத்தினருக்கு இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி: வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

Srilanka Kilinochchi University Students Army Camp
By Independent Writer Jan 18, 2022 11:56 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

தமிழ் இளைய சமுதாயத்தினரிடையே தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகளைப் பெறலாம் என கம்பவாரிதி இ. ஜெயராஜ் அபிப்பிராயத்தை முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று(17) அமையவுள்ள கம்பன் கழகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் சிங்கள சமூகத்தை விடத் தமிழ்ச் சமூகத்திலேயே ஆளுமையுள்ள பலர் உருவாகினர். ஆனால் தற்போது தமிழ்ச் சமூகத்திலிருந்து ஆளுமையுள்ள பலரை உருவாக்க முடியாமல் போனமை வருத்தத்துக்குரிய விடயம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம் எனக் கூறி அதற்குப் பரிகாரம் கண்டு வருகிறோம்.

ஆனால் எதிர் காலத்தை எவ்வாறு மாற்றவேண்டும் எனச் சிந்திக்கவில்லை. இலங்கையில் இனிவரும் காலங்களில் இரண்டு மொழிகளைப் பேசத் தெரிந்தால் மட்டுமே எமக்கான அங்கீகாரத்தைப் பெற முடியும்.

கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படும் கம்பன் கழகத்தின் ஊடாக பல செயற்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில் எமது எதிர்பார்ப்புகள் இப்போது கற்பனையாக உள்ள நிலையில் அதனை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எமது கழகத்தின் ஊடாக பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வரை உள்ள காலப்பகுதியில் அவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்குக் கம்பன் கழகம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களைத் தெரிவின் அடிப்படையில் ஒரு பகுதியினரைத் தெரிவு செய்து வெள்ளைக்காரர் ஒருவரை அழைத்து ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்படும். அதேபோல் சிங்கள மொழிப் பயிற்சிக்காகச் சிங்கள குடும்பம் ஒன்றில் இருவரை அனுப்பி ஒருவார காலம் அவர்களுடன் தங்கவைக்க வேண்டும்.

சிங்கள குடும்பத்துடன் தங்கும் போது அவர்களுக்கு மொழி கலாச்சாரம் மற்றும் புரிந்துணர்வை வளர்க்க முடிவதோடு இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. மேலும் இராணுவ முகாம்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களை ஓரிரு நாட்கள் அனுப்புவதன் மூலம் தலைமைத்துவத்தைக் கற்பிப்பது உதவியாக இருக்கும் இதைப் பலர் ஏற்காமல் போகலாம் ஆனால் நான் உண்மையைக் கூறுகிறேன்.

அதுமட்டுமல்லாது தலைமைத்துவத்தை நடைமுறையில் கற்பதற்காக அரசியலில் உள்ளவர்கள் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் வீடுகளுக்கு மாணவர்களை ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆகவே எமக்குத் தென்னிந்திய அரசியல் தலைமைகளுடன் நல்ல தொடர்புகள் இருக்கிற நிலையில் வேண்டுமென்றால் அங்கேயும் சென்று பயிற்சிகளைப் பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கடற்தொழில் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ,மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், முன்னாள் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம், மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஜெசீலன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US