பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய வழக்கறிஞர்
கெசல்வத்தை சஞ்சியாரச்சி வத்த பகுதியில் உள்ள இருண்ட மற்றும் பராமரிப்பின்றி கிடந்த கட்டிடமொன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கலுபோவில சரணங்கர வீதியில் வசிக்கும் 54 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
விசாரணை
அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 26ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 130 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், அதை பயன்படுத்த பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் மற்றும் வழக்கறிஞர் அடையாள அட்டை ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கெசல்வத்தை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC) தலைமையிலான குழு குறித்த பராமரிப்பின்றி இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டபோது, சந்தேகநபர் போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்த வழக்கறிஞர் அடையாள அட்டையை பரிசோதித்தபோது, அவர் 1996ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதவிப்பிரமாணம் செய்தவர் என்றும், புதுக்கடை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடத்தி வந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam