இந்திய கடற்படையினால் கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருள்
மியான்மரில் இருந்து அந்தமானுக்கு 5.5 டன் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை கடத்தி வந்த கடற்றொழில் படகை தடுத்து நிறுத்திய இந்திய கடற்படையினர், பெருமளவு போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்திய கடற்படையின் கண்காணிப்பு உளவு விமானம், அந்தமான் கடலில் ஒரு சிறிய கடற்றொழில் படகைக் கண்டு அதனை நோட்டமிட்டது.
இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையில் உள்ள கடலில் கண்காணிப்பட்ட இந்த படகு தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்தே அதனை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
படகுகள் மூலம் கடத்தல்கள்
இதன்போது, படகில் பெருமளவான போதைப்பொருட்களுடன் மியான்மர் குடிமக்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் சீனா மற்றும் தாய்லாந்து வழியாக தரைவழிப் பாதைகளில் கடுமையான கண்காணிப்புப் பணிகளைத் தவிர்ப்பதற்காக படகுகள் மூலம் கடத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri