ஆபத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்! அம்பலமான தகவல்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் வட்டாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நேரடியாக போட்டியிட்டு, வட்டார பிரதேச சபை உறுப்பினராக அற்புதராஜா தனுஷன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் தெரிவில் போது தமது அதிருப்தியினை அற்புதராஜா தனுஷன் உட்பட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நால்வர் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதனடிப்படையில் தற்போது குச்சவெளி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவர், தனக்கு இந்த தமிழரசுக் கட்சியின் நான்கு உறுப்பினர்களால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறித்த நால்வரும் சபைக்கு வந்தால் தனக்கு ஆபத்து என்று கூறி புல்மோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் அற்புதராஜா தனுஷன் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்விதம் மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்கள் இனியும் தொடருமா என பிரதேச சபை உறுப்பினராகிய அற்புதராஜா தனுஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
