கடற்படை உறுப்பினரின் மரணம் தொடர்பாக இந்தியாவிடம் கவலை வெளியிட்ட இலங்கை
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்தியப் படகை கைப்பற்றும் முயற்சியில், இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இந்தியாவிடம் தனது கவலையை இலங்கை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த திங்கட்கிழமை (24) இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்களது இழுவைப் படகை கைப்பற்றும் நடவடிக்கையிலேயே இலங்கையின் கடற்படை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி
இந்த சம்பவத்தை விபரித்த இலங்கை கடற்படை, கடற்படையின் சிறப்புப் படகுப் படைப்பிரிவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர், இந்திய இழுவைப்படகின் ஆக்ரோசமான சூழ்ச்சிகளை எதிர்த்ததால், கடுமையான காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ, இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் மூன்றாம் நிலை அதிகாரி ஒருவரை அழைத்து, இது தொடர்பில் கவலைகளை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam