வடக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானி குறித்து ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்

Tamils Eastern Province Northern Province of Sri Lanka
By Rakesh May 04, 2025 12:23 PM GMT
Report

வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு - தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி 'காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்' என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு,

 மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன். இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

தெளிவான உரித்தாவணங்கள் 

இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும். இந்தக் கட்டளைச் சட்டம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் எமது மக்கள் நூற்றாண்டுகளாக பாவித்து வந்த, ஆனால் தெளிவான உரித்தாவணங்கள் இல்லாத காணிகளை பறிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வடக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானி குறித்து ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம் | Land North Sumanthiran Letter For Anura

இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும். எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் ப‌‌‌ல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.

கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.

1. பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.

2. ⁠கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.

3. ⁠இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.

4. ⁠பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் நான்காயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள்: பெப்ரல் நடவடிக்கை

நாடு முழுவதும் நான்காயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள்: பெப்ரல் நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மக்களின் உரிமை

இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.

வடக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானி குறித்து ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம் | Land North Sumanthiran Letter For Anura

இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள், அந்த மாகாணத்தின் மக்கள் என்ற ரீதியில் சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.

இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு - தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.

உண்மையாகவே நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புகின்ற எந்த அரசும் இதைத் தவிர்க்க வேண்டும். ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் சென்றுள்ள ஜனாதிபதி : நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

வியட்நாம் சென்றுள்ள ஜனாதிபதி : நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US