மாந்தை மேற்கில் காணி அபகரிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நேரடி விஜயம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கள்ளியடி பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்ட காணிகளை தனிநபர் ஒருவர் அபகரித்து காடுகளை அழித்து அத்து மீறி செயற்பட்டு வருவதாக அப்பகுதி மக்களினால் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலமைமையை அவதானித்துள்ளார்.
குறித்த பகுதியில் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு என 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகள் வன வள திணைக்களத்தினால் எல்லை இடப்பட்டிருந்த நிலையில் அண்மையில் மக்களின் தேவைக்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
பொருளாதார நிலை மற்றும் 'கோவிட்' பிரச்சினை காரணமாக மக்கள் காணிகளை துப்பரவு செய்யாத நிலையில், மாந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரு வார காலத்திற்கு மேலாக மக்களின் காணிகளை துப்பரவு செய்ததுடன் ,காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்களால் கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு பல முறை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ,சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதுடன் மக்களிடம் நேரடியாக பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
அதே நேரம் குறித்த பிரச்சினை சம்மந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளாருக்கு தெரியப்படுத்தி விரைவில் மக்களின் காணிகளை விடுவித்து வழங்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
