கோட்டாபயவிற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Gotabaya Rajapaksa Ministry of Defense Sri Lanka
By Kamal Jul 30, 2025 02:23 PM GMT
Report

புதிய இணைப்பு

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபகச இன்று உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.

எனினும், பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி விசாரணையை கொழும்பில் நடத்துமாறு கோரியுள்ளார்.

எனினும், நீதியரசர்கள் கொண்ட அமர்வு அதனை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டின் விசாரணை கோட்டபய சாட்சியமளிக்கத் தயாராக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் சாட்சியமளிக்கக் கோரியதாக அவரது சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன செயற்பாட்டாளர்களின் பெற்றோர் சார்பில் முன்னிலையான, சட்டத்தரணி நுவன் போப்பகே சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் விசாரணையின் போது இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் சாட்சியாக முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கோட்டாபயவுக்கு 2019 ஆம் ஆண்டு பிறப்பித்த மனுவை இரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு மனுதாரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ராஜபக்சவின்வின் தற்போதைய நிலைப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமான வழிமுறைகளைக் கோரி நான்கு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டிற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதால், உயர் நீதிமன்றம் தற்போதைய மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. 

முதலாம் இணைப்பு 

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமற்போன வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் செய்யப்பட்ட ஹபியஸ் கொர்ப்பஸ் வழக்கில் சாட்சியம் வழங்கத் தயாராக உள்ளதாக கோட்டாபயவின் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச தரப்பில் சட்டப்பூர்வமாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு தீர்ப்புக்கு திகதி அறிவிப்பு

வழக்கு விவகாரம் 

பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்தில் சாட்சி அளிக்க முடியாது என்றும், ஆனால் கொழும்பில் உள்ள நீதிமன்றமொன்றில் சாட்சி அளிக்க தயார் என கோட்டாபய கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவிற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Lalith Gugan Case Gota Ready Give Appear Court

இதையடுத்து, யசந்த கொடாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற குழு, சாட்சி அளிக்கும் கோரிக்கையை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நான்கு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கோட்டாபய ராஜபக்ச சாட்சியளிக்கத் தயாராக இருப்பதால், வழக்கை முடிக்க வேண்டும் எனவும் அவரது தரப்பில் வாதம் வழங்கப்பட்டது.

இதற்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி நுவன் போப்பகே அவரும் உடன்பாடும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சீ.ஐ.டி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சீ.ஐ.டி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

சாட்சி 

இதனடிப்படையில், வழக்கு விசாரணையை முடிக்க நீதிமன்றம் தீர்மானித்தது. இந்த வழக்கு 2011 டிசம்பர் 9ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டாபயவிற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Lalith Gugan Case Gota Ready Give Appear Court

இருவரது காணாமற்போன வழக்கில் 2019இல், அந்த நேரத்தில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாது எனக் கூறி, அவர் அந்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த அறிவுறுத்தலை இரத்துச் செய்து அவரை சாட்சியாக அழைக்கும் உத்தரவை இடைநிறுத்திய நிலையில், இந்த தீர்ப்பை நீக்குவதற்காகவே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சீ.ஐ.டி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சீ.ஐ.டி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US