மகிந்த மற்றும் கோட்டாவைப் போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: கிரியெல்ல எம்.பி
மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆகியோரைப் போல் ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe) தமிழ் மக்களின் எதிரியாவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்சுமன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் கூறியதாவது,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றியடைவார்.
சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் அரசியல் தீர்வு காணப்படும் என்பதுடன் அவர் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பார். அத்துடன் எந்த அரசியல் தலைவருடன் பகிரங்க விவாதத்துக்குத் சஜித் பிரேமதாச தயாராகவே இருக்கின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
