ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு...! மே நடுப் பகுதியில் கருத்துக் கணிப்பு அறிக்கை
ஜனாதிபதித் தேர்தலின் கள நிலவரம் மற்றும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து வரும் உள்நாட்டு, சர்வதேச ஆய்வு அமைப்புகளின் கருத்துக் கணிப்பு அறிக்கையை மே நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் தற்போதைய ஜனாதிபதி, மேற்படி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இறுதியானதொரு முடிவை எடுத்து அது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார் எனவும் அறியமுடிகின்றது.
பிரசார வியூகம்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya)மற்றும் தேசிய மக்கள் சக்தி (National People's Power) என்பனவும் கிராமிய மட்டத்தில் கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருகின்றன.

இதன்போது பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பிரசார வியூகம் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கான உள்ளடக்கங்களும் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam